தூத்துக்குடி: இடைத் தேர்தலில் போட்டியிட தனது மனைவிக்கு சீட் கிடைக்காகதால் தூத்துக்குடி மாவட்டம் சாயர்புரம் நகர தே.மு.தி.க. செயலாளர் ராஜேந்திரன்
தனது பதவியை ராஜினாமா செய்தார்.
தூத்துக்குடி மாவட்டம் சாயர்புரம் நகர தே.மு.தி.க. செயலாளராக இருப்பவர் ராஜேந்திரன். இவர் தனது மனைவி ராஜேஸ்வரிக்கு, ஸ்ரீவைகுண்டம் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட சீட் கேட்டு கட்சி தலைமையிடம் விண்ணப்பித்திருந்தார். ஆனால்
ராஜேஸ்வரிக்கு சீட் கிடைக்கவில்லை.
அதனால், ராஜேந்திரன், தனது நகர செயலாளர் பதவியை ராஜினாமா செய்தார். அதற்கான கடிதத்தை கட்சியின் ஸ்ரீவைகுண்டம் ஒன்றிய செயலாளர் தசரத பாண்டியனிடம் கடிதம் கொடுத்தார்.










