இடைத்தேர்தல்: தேமுதிகவுக்கு முரசு சின்னம் இல்லை?
இதையடுத்து தேமுதிக போட்டியிட்ட அனைத்து தொகுதிகளிலும் முரசு சின்னம் ஒதுக்க, நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி மக்களவைத் தேர்தலில் 40 தொகுதிகளிலும் அந்தக் கட்சி முரசு சின்னத்தில் போட்டியிட்டது.
அதே போல விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு மக்களவைத் தேர்தலி்ல் நட்சத்திர சின்னம் ஒதுக்கப்பட்டது.
ஆனால், உச்ச நீதிமன்றத்தின் அந்தத் தீர்ப்பு நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலுக்கு மட்டும் தான் பொருந்தும் என்றும், இதனால் தேமுதிக, விடுதலை சிறுத்தை கட்சிகளை பதிவு செய்யப்பட்ட அங்கீகாரம் பெறாத கட்சிகளாகவே கருத வேண்டும் என்றும் இடைத் தேர்தல் நடக்கவுள்ள 5 சட்டமன்றத் தொகுதிகளின் தேர்தல் அதிகாரிகளுக்கும் மத்திய தேர்தல் ஆணையத்திடம் இருந்து சுற்றறிக்கை வந்துள்ளது.
இதனால் இடைத் தேர்தலில் தேமுதிகவுக்கு முரசு சின்னம் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அந்தக் கட்சிக்கு ஏதாவது ஒரு சுயேட்சை சின்னமே ஒதுக்கப்படும் என்று தெரிகிறது.
இடைத் தேர்தல் வேட்பாளர் இறுதிப்பட்டியல் நாளை மறுநாள் அறிவிக்கப்படும். அன்று மாலை தான் சின்னங்கள் ஒதுக்கப்படும்.
அப்போது தான் தேமுதிக வேட்பாளர்களுக்கு முரசு சின்னம் ஒதுக்கப்படுமா அல்லது 5 தொகுதிகளிலும் வெவேறு சுயேட்சை சின்னங்கள் ஒதுக்கப்படுமா என்பது தெரியும்.