52 வாரங்களில் இல்லாத உயர்வை சந்தித்த சென்செக்ஸ்

வெள்ளிக்கிழமை, ஜூலை 31, 2009, 14:20 [IST]
மும்பை: மும்பை பங்குச் சந்தையில் இன்று காலை வர்த்தகம் தொடங்கியதும், 52 வாரங்களில் இல்லாத அளவுக்கு உயர்வைச் சந்தித்தது சென்செக்ஸ்.

இன்று காலை வர்த்தகம் தொடங்கியதும் சென்செக்ஸ் 292 புள்ளிகள் உயர்ந்து 15,680 ஆக இருந்தது. அதேபோல நிப்டியும் 82 புள்ளிகள் உயர்ந்து 4654 ஆக இருந்தது.
  Read:  In English 
வங்கிகளின் முதலீடுகள், ரியல் எஸ்டேட், மெட்டல் உள்ளிட்டவற்றில் ஏற்பட்ட விறுவிறு விற்பனையே இதற்குக் காரணம்.

இந்த உயர்வால், ஸ்டெர்லைட் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் பங்குகள் 3.6 சதவீத உயர்வைச் சந்தித்தன. ஸ்டேட் வங்கி, டாட்டா மோட்டார்ஸ் உள்ளிட்டவையும் பலன் அடைந்தன.

1st Test , Lord's Cricket Ground, St John's Wood
England won by 5 wickets