Thought for the day
Your page will load in ...
Close Ad X
Advertisement
English Hindi ગુજરાતી ಕನ್ನಡ മലയാളം తెలుగు
 
Share This Story

இந்தியாவின் சுகாதார மையமாக துடிக்கும் புதுச்சேரி

Published: Tuesday, August 11, 2009, 18:20 [IST]

புதுச்சேரி: சுகாதார துறையில் நாட்டின் முன்னோடியாக திகழ தேவையான நடவடிக்கைகளை புதுச்சேரி எடுத்து வருவதாக சுகாதார துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் குட்டி யூனியன் பிரேதங்களில் ஒன்று புதுச்சேரி. சுகாதார துறையில் வேகமான வளர்ச்சி காண புதுச்சேரி அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்த தயாராகி வருகிறது.

இது குறித்து சுகாதார துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், புதுச்சேரி அரசு மருத்துவமனைகளில் தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் உள்ளன. டாக்டர்கள் மற்றும் ஊழியர்கள் எண்ணிக்கையும் சிறப்பாக உள்ளது.

சுகாதார துறையில் மத்திய அரசு நிர்ணயித்துள்ள இலக்கை நோக்கி வேகமாக சென்று கொண்டிருக்கிறோம். விரைவில் அதை எட்டிவிடுவோம்.

கிராம பகுதிகளில் அரசு மருத்துவமனைகளுடன் இணைந்து அரசு சார அமைப்புகளும் செயல்பட்டு சுகாதார மேம்பாட்டுக்காக உழைத்து வருகின்றன என்றார்.

இந்நிலையில் கடந்த 15 ஆண்டுகளாக பிரான்சை சேர்ந்த பார்டேஜ் டான்ஸ் லி மான்டே என்ற அமைப்பின் கிளை சுகாதார மேம்பாட்டுக்காக புதுச்சேரியில் செயல்பட்டு வருகிறது.

இந்த கிளையின் தலைவராக இருக்கும் டாக்டர் நல்லம் கூறுகையில், பாரிஸ் இருந்து இயங்கி வரும் இந்த அமைப்பு அடிக்கடி புதுச்சேரி கிராம பகுதியில் சுகாதாரம் தொடர்பான நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்து வருகிறது.

கருத்தை எழுதுங்கள்
Click here to type in Tamil
Subscribe Newsletter