ஸ்வைன்: பெங்களூரில் ஆசிரியை சாவு-முதல் பலி!

வியாழக்கிழமை, ஆகஸ்ட் 13, 2009, 13:52 [IST]
பெங்களூர்: பெங்களூரில் பன்றிக் காய்ச்சல் நோய்க்கு ஆசிரியை ஒருவர் பலியாகியுள்ளார். பெங்களூரில் இந்த நோயால் பறிபோன முதல் உயிர் இது என்பது குறிப்பிடத்தக்கது.

பிடிஎம் 2வது ஸ்டேஜை சேர்ந்த ரூபா (26) என்பவர் ஜெயநகரில் ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வந்தார்.
  Read:  In English 
அவருக்கு பன்றிக் காய்ச்சலுக்கான அறிகுறிகள் ஏற்பட்டதையடுத்து கடந்த ஞாயிற்றுக்கிழமை செயிண்ட் பிலோமினாஸ் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஆனால், சிகிச்சை பலனின்றி இன்று இறந்தார். அவருக்கு சர்க்கரை நோயும் இருந்து வந்தது குறிப்பிடத்தக்கது.

இதன்மூலம் பெங்களூரி்ல் இந்த நோய்க்கு முதல் உயிர் பலியாகியுள்ளது. பெங்களூரில் இதுவரை 20 பேர் இந்த நோய் தாக்குதலுக்கு உள்ளாகியிருப்பது உறுதியாகியுள்ளது.

1st Test , Lord's Cricket Ground, St John's Wood
England won by 5 wickets