For Quick Alerts
For Daily Alerts
Just In
ஒரே சேலையில் தூக்கு-2 சகோதரிகள் தற்கொலை
காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் இரு சகோதரிகள் ஒரே சேலையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டனர்.
அவர்களது பெயர் பவித்ரா (17), பாரதி (16). இதில் பவித்ரா பச்சையப்பன் கல்லூரியிலும், பாரதி பெரிய காஞ்சிபுரத்தில் உள்ள பள்ளி ஒன்றில் பிளஸ் 2வும் படித்து வந்தனர்.
இவர்களது வீடு காஞ்சிபுரம் செட்டியார்பேட்டை ஹரிகிருஷ்ணாபுரத்தில் உள்ளது. இவர்களது தந்தையின் பெயர் பரசுராமன் (45). இவர்களுக்கு பக்தவட்சலம்(18) என்ற சகோதரரும் இருக்கிறார்.
சமீபத்தில் பரசுராமன், தனது இரு மகள்களையும் காதல் விவகாரம் தொடர்பாக கண்டித்ததாக கூறப்படுகிறது.
இந் நிலையில் இரு சகோதரிகளும் ஒரே சேலையில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.
Comments
Story first published: Wednesday, September 30, 2009, 15:55 [IST]