மும்பை: தானே நகரில் அடு்க்குமாடிக் குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கியவர்களைக் காப்பாற்ற முயன்ற 6 தீயணைப்புப் படை வீரர்கள் புகையில் சிக்கி மூச்சுத் திணறி பலியாயினர்.
தானே நகரில் 14 மாடிக் குடியிருப்பின் மொட்டை மாடியில் அதில் குடியிருப்பவர்கள் வெடிகள் வெடித்தனர். இதில் அந்தக் கட்டடத்தில் தீ பிடித்துக் கொண்டது.
இதையடுத்து தீயை அணைக்க வீரர்கள் விரைந்தனர். பல மணி நேரம் போராடி தீயை அணைத்த வீரர்கள் லிப்ட் மூலம் தரையிறங்க முயன்றனர்.
பலியான தீயணைப்புப் படை வீரர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என மகாராஷ்டிர முதல்வர் அசோக் சவான் அறிவித்துள்ளார்.
தானே நகரில் 14 மாடிக் குடியிருப்பின் மொட்டை மாடியில் அதில் குடியிருப்பவர்கள் வெடிகள் வெடித்தனர். இதில் அந்தக் கட்டடத்தில் தீ பிடித்துக் கொண்டது.
இதையடுத்து தீயை அணைக்க வீரர்கள் விரைந்தனர். பல மணி நேரம் போராடி தீயை அணைத்த வீரர்கள் லிப்ட் மூலம் தரையிறங்க முயன்றனர்.
Read: In English
இதற்காக லிப்டை அவர்கள் திறந்தபோது, தீ விபத்தின்போது அதில் முடங்கிய புகை அவர்களைத் தாக்கியது. இதில் 6 பேருமே அந்த இடத்திலேயே மயங்கி விழுந்து பலியாயினர்.பலியான தீயணைப்புப் படை வீரர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என மகாராஷ்டிர முதல்வர் அசோக் சவான் அறிவித்துள்ளார்.







