For Daily Alerts
Just In
மாயவரம் ரயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல்
திருச்சி: திருச்சியிலிருந்து மாயவரம் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் வெடிகுண்டு இருப்பதாக வந்த தகவலைத் தொடர்ந்து ரயிலில் சோதனை நடத்தப்பட்டது.
திருச்சி - மாயவரம் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் வெடிகுண்டு இருப்பதாக டெலிபோனில் மிரட்டல் விடுக்கப்பட்டது. இதையடுத்து அந்த ரயிலில் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை நடத்தினர்.
இருப்பினும் வெடிகுண்டு எதுவும் சிக்கவில்லை. இதையடுத்து அது வதந்தி என்று தெரிய வந்தது.
டெலிபோன் மூலம் மிரட்டல் விடுத்த நபரை போலீஸார் தற்போது தேடி வருகின்றனர்.
Story first published: Thursday, October 29, 2009, 18:07 [IST]