ஐஎம்எப்பிடம் 200 டன் தங்கம் வாங்கிய ரிசர்வ் வங்கி!

செவ்வாய்க்கிழமை, நவம்பர் 3, 2009, 14:34 [IST]
மும்பை: சர்வதேச நிதி நிறுவனம் ஐஎம்எப்பிடமிருந்து 200 டன் தங்கத்தை வாங்கியது இந்திய ரிசர்வ் வங்கி.

ரிசர்வ் வங்கியின் அந்நிய செலாவணி நிர்வாகத்தின் நடவடிக்கைகளில் ஒரு பகுதியாக இந்த தங்கக் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.

கடந்த செப்டம்பர் 18-ம் தேதி துவங்கிய இந்த கொள்முதல் கடந்த இரு வாரங்களாக நடந்தது.
  Read:  In English 
ஐஎம்எப் தன்னிடமுள்ள தங்க இருப்பிலிருந்து 403 டன்களை விற்க முடிவு செய்து அறிவிப்பு வெளியிட்டது. இந்த விற்பனை மூலம் கிடைக்கும் பணத்தைக் கொண்டு, குறைந்த வருமானமுள்ள நாடுகளின் பொருளாதார நெருக்கடியைச் சமாளிக்க நிதியுதவி செய்ய ஐஎம்எப் இயக்குநர் குழு தீர்மானித்திருந்தது.

இந்தத் திட்டப்படி 200 டன் தங்கத்தை இந்தியா வாங்கிக் கொண்டுள்ளது.

1st Test , Lord's Cricket Ground, St John's Wood
England won by 5 wickets