அகமதாபாத்-பெங்களூர் எக்ஸ்பிரஸ் தடம்புரண்டது

புதன்கிழமை, நவம்பர் 4, 2009, 16:24 [IST]
மும்பை: அகமதாபாத்தில் இருந்து பெங்களூர் சென்று கொண்டிருந்த காந்திதாம் எக்ஸ்பிரஸ் ரயில் மும்பை அருகே இன்று காலை தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. இவ்விபத்தில் 12 பேர் காயமடைந்தனர்.
  Read:  In English 
மும்பை அருகே தானே மாவட்டத்தில் உள்ள பிவான்டியை நோக்கி வரும் போது, தொம்பிவலி என்ற இடத்தில் ரயில் தடம் புரண்டது. 4 பெட்டிகள் சேதமடைந்தன.

உயிரிழப்பு ஏதும் இல்லை. விபத்து நடந்தவுடன் உடனடியாக, சம்பவ இடத்துக்கு மாற்று ரயில் அனுப்பப்பட்டது. காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். மற்ற பயணிகள் மாற்று ரயில் மூலம் பெங்களூர் அனுப்பி வைக்கப்பட்டதாக சென்ட்ரல் ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.

1st Test , Lord's Cricket Ground, St John's Wood
England won by 5 wickets