மறுகுடியமர்த்தலி்ல உலக சாதனை-சொல்கிறார் இலங்கை அமைச்சர்

ஞாயிற்றுக்கிழமை, நவம்பர் 15, 2009, 18:12 [IST]
கொழும்பு: போரினால் இடம்பெயர்ந்த 10 ஆயிரம் மக்களை ஒரு வாரத்துக்குள் மறுகுடியமர்வு செய்யவைத்து உலக சாதனை படைத்துவிட்டோம் என்று இலங்கை அமைச்சர் கூறியுள்ளார்.

இலங்கை அரசின் பேரிடர் மேலாண்மை மற்றும் மனித உரிமைகள் துறை அமைச்சர் மஹிந்தா சமரசிங்கே கொழும்பில் செய்தியாளர்களிடம் பேசுகையில், 'இடம்பெயர்ந்த மக்களை மீண்டும் அவரவர் இடங்களில் மறுகுடியமர்வு செய்யும் பணியி்ல் தினந்தோறும் ஈடுபட்டோம். இப்பணியை செய்து முடிக்க நிறைய செலவு செய்தோம்.

10 ஆயிரம் மக்களை ஒரு வாரத்தில் மறுகுடியமரச் செய்ததன் மூலம் இலங்கை உலக சாதனை படைத்துள்ளது. இதற்காக நாங்கள் பெருமைப்படுகிறோம். இம்மக்களும் இலங்கையின் குடிமக்களே' என்றார்
IPL, Wankhede Stadium, Mumbai
Kolkata Knight Riders won by 32 runs
1st Test , Lord's Cricket Ground, St John's Wood
Match starts at 03:30 pm IST  
IPL, Himachal Pradesh Cricket Association Stadium, Dharmasala
Match starts at 04:00 pm IST