ஏர் இந்தியாவின் நஷ்டக் கணக்கு ரூ. 5000 கோடியாக எகிறியது

புதன்கிழமை, டிசம்பர் 2, 2009, 9:26 [IST]
டெல்லி: எரிகிற தீயில் எண்ணையை ஊற்றியது போல, ஏற்கனவே நஷ்டத்தில் தவித்து வரும் ஏர் இந்தியாவின் நஷ்டக் கணக்கு தற்போது இரட்டிப்பாகி ரூ. 5000 கோடியாக எகிறியுள்ளது.

உலகப் பொருளாதார சீர்குலைவு, லாபம் அதிகம் வராதது ஆகியவையே இதற்குக் காரணம் என்று மத்திய விமானப் போக்குவரத்துத்துறை அமைச்சர் பிரபுல் படேல் கூறியுள்ளார்.

2007-08ம் ஆண்டில் ஏற் இந்தியாவின் நஷ்டம் ரூ. 2,226.16 கோடியாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து ராஜ்யசபாவில் கேட்கப்பட்ட கேள்விக்கு பிரபுல் படேல் கூறுகையில், 2004-05ம் ஆண்டிலிருந்தே ஏர் இந்தியா நஷ்டத்தை சந்தித்து வருகிறது.
  Read:  In English 
ஏர் இந்தியாவின் நிலையை சரி செய்ய தேசிய இந்திய விமானப் போக்குவரத்து நிறுவனம் (இதுதான் ஏர் இந்தியாவை நிர்வகிக்கிறது) பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. செலவுகளைக் குறைத்து வருவாயை அதிகரிக்கத் தேவையான நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.

நடப்பு நிதியாண்டுக்குள் ரூ. 2000 கோடி அளவுக்கு செலவுகளைக் குறைக்குமாறு ஏர் இந்தியா கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது என்றார் அவர்.

1st Test , Lord's Cricket Ground, St John's Wood
England won by 5 wickets