மும்பை பந்த்ரா-ஒர்லி கடல் பாலத்தில் விபத்து: ஒருவர் பலி

செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 8, 2009, 15:23 [IST]
மும்பை: மும்பை, பந்த்ரா-ஒர்லி கடல் பாலத்தின் மீது நடந்த திடீர் விபத்தில் ஒருவர் உயிரிழந்தார்.

மும்பை கடல் பாலம் செயல்பாட்டுக்கு வந்த பின்னர் நடந்துள்ள முதல் விபத்து இது என்று கூறப்படுகிறது.

மும்பையில், பந்த்ராவையும், ஒர்லியையும் இணைக்கும் கடல் பாலம் கடந்த ஜூன் மாதம் திறந்து வைக்கப்பட்டது. இந்த நிலையில் ஒரு டாடா நானே காரும் ஸ்கோடா காரும் இந்த பாலத்தின் மீது சென்று கொண்டிருந்தபோது மோதிக் கொண்டன. இதில் ஒருவர் உயிரிழந்தார். ஒருவர் காயமடைந்தார்.
  Read:  In English 
விபத்தால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின்னர் போலீஸார் விரைந்து வந்து போக்குவரத்தை சீர்படுத்தினர்.

டாடா நானோ கார் சந்தித்துள்ள முதல் பெரிய விபத்து இது என்று கருதப்படுகிறது.

1st Test , Lord's Cricket Ground, St John's Wood
England won by 5 wickets