கே.ஜி. படுகை எரிவாயு: தமிழகத்தை ஒதுக்கிய மத்திய அரசு
இது தொடர்பாக பிரதமர் மன்மோகன் சிங்குக்கு, அவர் அனுப்பியுள்ள கடிதத்தி்ல்,
நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்கும் மாநிலங்களில் தமிழகம் நான்காவது இடத்தை வகிக்கிறது. மேலும், தொழில் வளர்ச்சியில் முன்னணி மாநிலமாகவும் விளங்கி வருகிறது.
தமிழகத்தின் இரண்டு பெரிய உரத் தொழிற்சாலைகளாக இருப்பவை மெட்ராஸ் பெர்டிலைஸர்ஸ் மற்றும் ஸ்பிக் ஆகியனவாகும். இவை உர உற்பத்திக்கு நாப்தாவை போன்ற பொருள்களை நம்பி இருக்கின்றன. நாப்தாவின் விலை உயர்வால், யூரியா, டை-அமோனியம் பாஸ்பேட் ஆகியவற்றின் தயாரிப்பை ஸ்பிக் நிறுவனம் நிறுத்தி வைத்துள்ளது. இதனால்,தமிழகத்தில் போதுமான அளவுக்கு யூரியா கிடைப்பதில்லை.
இயற்கை எரிவாயு தேசத்தின் சொத்து...
கிருஷ்ணா-கோதாவரி படுகையில் உற்பத்தி செய்யப்படும் இயற்கை எரிவாயு மற்ற மாநிலங்களுக்கு ஒதுக்கீடுசெய்யப்பட்டுள்ளது. ஆனால், தமிழகத்துக்கு சுத்தமாக எந்த ஒதுக்கீடும் இல்லை.
இந்த விஷயத்தில், தமிழகத்தின் நலன் மொத்தமாகபுறக்கணிக்கப்பட்டுள்ளது. கிருஷ்ணா-கோதாவரி படுகையில் உற்பத்தியாகும் இயற்கை எரிவாயு தேசத்தின் சொத்து; அதை,அனைத்து மாநிலங்களுக்கும் சமமான வகையில் பங்கிட வேண்டும்.
கிருஷ்ணா-கோதாவரி படுகையில் இருந்து தனியார் துறை மூலம் இயற்கை எரிவாயுவை இரண்டு குழாய்கள் வழியே தூத்துக்குடி வரை கொண்டு செல்ல மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
அடுத்த பத்தாண்டுகளில் தமிழகத்தின் எரிவாயு தேவையின் அளவு ஆண்டுக்கு 9 சதவீதமாக அதிகரிக்கும் எனமதிப்பிடப்பட்டுள்ளது.
எனவே, தமிழகத்தில் உள்ள இரண்டு உரத் தொழிற்சாலைகள், புதிதாக வரவிருக்கும் அனல் மின் நிலையங்கள் ஆகியவற்றுக்குத் தேவையான எரிவாயுவை கிருஷ்ணா-கோதாவரி படுகையில் இருந்து மத்திய அரசு வழங்கிட வேண்டும்.இந்தப் பிரச்னையில் பிரதமர் மன்மோகன் சிங் உடனடியாகத் தலையிட்டு, தமிழகத்துக்கு சாதகமான நிலையைஏற்படுத்தித் தர வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார் முதல்வர் கருணாநிதி.