Thought for the day
Your page will load in ...
Close Ad X
Advertisement
English Hindi ગુજરાતી ಕನ್ನಡ മലയാളം తెలుగు
 
Share This Story

சட்டீஸ்கரில் 7 நக்சல்கள் சுட்டுக்கொலை

Published: Friday, December 11, 2009, 17:56 [IST]

ராய்ப்பூர்: சட்டீஸ்கரில் போலீஸ்-நக்சலைட் இடைய நடந்த கடும் துப்பாக்கிச் சண்டையில் 7 நக்சலைட்டுகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

சட்டீஸ்கர், தான்டேவாடா மாவட்டத்தில் ஆரன்பூர் வனப்பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் மீது நேற்று நக்சலைட்டுகள் தாக்குதல் நடத்தினர்.

பதிலுக்கு போலீசாரும் திருப்பி தாக்கியத்தை அடுத்து அப்பகுதியில் இருதரப்புக்கும் இடையே நீண்ட நேரம் கடும் துப்பாக்கிச் சண்டை ஏற்பட்டது. இதி்ல் 7 நக்சலைட்டுகள் சுட்டுக்கொல்லப்பட்டதாக பாஸ்டர் சரக ஐ.ஜி ஆர்.கே.விஜ் தெரிவித்தார்.

மாவோயிஸ்டு இயக்கத்தைச் சேர்ந்த அந்த நக்சலைட்டுகள் போலீசாரின் கண்ணில் படாமல் இருப்பதற்காக பள்ளி சீருடைகளை அணிந்திருந்ததாகவும் அவர் தெரிவித்தார்.

சுட்டுக்கொல்லப்பட்ட நக்சலைட்டுகளின் பைகளில் இருந்து கிரானைடுகள் உள்ளிட்ட வெடிபொருட்கள் மற்றும் துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டன.

கருத்தை எழுதுங்கள்
Click here to type in Tamil
Subscribe Newsletter
2nd Test , Headingley, Leeds
Match starts at 03:30 pm IST  
Qualifier 2 , Eden Gardens, Kolkata
Match starts at 08:00 pm IST