வாஷிங்டன்: மும்பைத் தாக்குதல் திட்டத்திற்கு உதவியது. டென்மார்க் செய்தித் தாள் அலுவலகம் மீது தாக்குதல் நடத்தத் திட்டமிட்டது உள்ளிட்ட வழக்குகளில் டேவிட் கோல்மேல் ஹெட்லி, தஹவூர் ஹூசேன் ராணா ஆகியோர் மீது சிகாகோ கோர்ட்டில் குற்றச்சாட்டுப் பதிவு செய்யப்பட்டது.
Read: In English
மொத்தம் 12 அம்சங்களின் கீழ் இருவர் மீதும் குற்றச்சாட்டுப் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே கடந்த டிசம்பர் 7ம் தேதி இருவர் மீதும் தாக்கல் செய்யப்பட்ட குற்றச்சாட்டுக்களே தற்போதும் பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
















