திருமணத்துக்கு பின் டென்னிசுக்கு 'குட்-பை': சானியா

வெள்ளிக்கிழமை, ஜனவரி 15, 2010, 12:54 [IST]
டெல்லி: திருமணத்துக்கு பிறகு விளையாட்டில் இருந்து ஓய்வு பெறப் போவதாக இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா அறிவித்துள்ளார்.

சானியாவுக்கும் அவரது பால்ய கால நண்பர் சொஹ்ராப் மிர்சாவுக்கும் கடந்த ஜூலை மாதம் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது.
  Read:  In English 
இந்நிலையில் நேற்று டெல்லியில் பேட்டியளித்த சானியா மிர்சா, 'திருமணத்துக்கு பிறகு நான் டென்னிசில் இருந்து ஓய்வு பெற்று விடுவேன், ஆனால் அதற்கு இன்னும் சில காலம் இருக்கிறது" என்றார்.

திருமணம் எப்போது நடக்கும் என்பதை அவர் தெரிவிக்க மறுத்து விட்டார். அவரது தந்தையான இம்ரான் மிர்சா, 'திருமணத்திற்கு பிறகு டென்னிஸிலிருந்து ஓய்வு பெறுவது முழுக்க முழுக்க சானியாவின் முடிவு' என்றார்.

1st Test , Lord's Cricket Ground, St John's Wood
England won by 5 wickets