மும்பை தீவிரவாதத் தாக்குதலில் பாக். ராணுவத்திற்குத் தொடர்பு உள்ளது - உஜ்வால் நிகாம்

செவ்வாய்க்கிழமை, மார்ச் 9, 2010, 17:46 [IST]
மும்பை: மும்பையில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலில் பாகிஸ்தான் ராணுவத்திற்குத் தொடர்பு உள்ளது. அந்த நாட்டு ராணுவத்தில் மேஜர் ஜெனரலாக உள்ள ஒருவர்தான் இந்தத் தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாதிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டதை நேரடியாக கண்காணித்து அறிவுரைகளை வழங்கினார் என்று மும்பை தனி கோர்ட்டில் அரசு சிறப்பு வழக்கறிஞர் உஜ்வால் நிகாம் பரபரப்புத் தகவலை வெளியிட்டார்.

பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் உள்ள லஷ்கர் இ தொய்பா முகாம்களுக்கு நேரடியாகப் போய் இவர் கண்காணித்ததாகவும் நிகாம் தெரிவித்தார்.

மும்பை வழக்கில் தனது இறுதி வாதத்தை இன்று தொடங்கினார் நிகாம். அப்போது அவர் கூறுகையில், மும்பையில் தாக்குதலில் ஈடுபட்டு உயிருடன் பிடிபட்ட அஜ்மல் கசால், கொல்லப்பட்ட பிற 9 தீவிரவாதிகளும், லஷ்கர் இ தொய்பாவின் சார்பாக பயிற்சியில் அமர்த்தப்பட்டனர்.

இவர்களுக்கு ராணுவப் பயிற்சியும், உளவுப் பயிற்சியும் அளிக்கப்பட்டது. இந்த பயிற்சி வகுப்புகளை பாகிஸ்தான் ராணுவத்தின் சில அதிகாரிகள் நேரடியாக கண்காணித்து உதவிகள் செய்தனர். அவர்களில் மேஜர் ஜெனரல் ஒருவரும் அடக்கம்.

பாகிஸ்தான் மண்ணில்தான் தாக்குதல் சதித் திட்டம் தீட்டப்பட்டது. இது பாகிஸ்தான் ஆதரவுடன் நடந்த தீவிரவாத செயல் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
  Read:  In English 
கசாப் கொடுத்த வாக்குமூலத்தில், பாகிஸ்தான் மேஜனர் ஜெனரல் ஒருவர் பயிற்சியின்போது கூட இருந்தார் என்றும் பயிற்சியை மேற்பார்வையிட்டார் என்றும் கூறியுள்ளான்.

அந்த அதிகாரியின் பெயரை தீவிரவாதிகளுக்கு லஷ்கர் இயக்கத்தினர் வேண்டும் என்றே தெரிவிக்கவில்லை. காரணம், அவர் ராணுவத்தில் மிக மிக உயரிய பொறுப்பில் இருப்பவர் என்பதால் என்றார் நிகாம்.

User Comments
moonson 09 Mar 2010 10:29 pm
உலகத்தில் பாகிஸ்தானில் உளது போல் கெட்ட யன்னம் கொண்டவர்கள் எங்கயும இல்லை. அபினி, குண்டு வாய்பறற்கான ட்ரைனிங், உலகத்தில் அமைதியை கேடுபது, இது எந்த குரானில் சொலிருகிறது, உங்கள் மக்களுக்கு நல்லது சையுங்கள், இங்கயும் ௨௦ கோடி முஸ்லிம் சந்தோசமாய் ஈருகிரர்கல்.
ராஜா 09 Mar 2010 09:05 pm
நினைச்சண்டா அப்பவே நினைச்சன் விபத்து நடந்த மறுநாள் நீங்க இந்தியன் வெடி வச்சான் சொல்லும்போதே நினைச்சேன். ஆனா ஒன்னு இந்தியாவின் மயிற கூட புடுங்க முடியாது ஒங்களால சென்னை பக்கம் வந்துராதிங்க எங்க போலீஸ் மத விசயதுள்ள லஞ்சம் வாங்கினாலும் இந்த விசயதுள்ள நேர்மையா இருப்பானுக மாட்டிணிக மொவனே கஞ்சிதான் ௧௦ வழக்கெல்லாம் ஒன மேல விழுந்துடும்
[ கருத்தை எழுதுங்கள் ]
1st Test , Lord's Cricket Ground, St John's Wood
England won by 5 wickets