For Quick Alerts
For Daily Alerts
Just In
இலங்கை அருகே கடல்பகுதியில் நிலநடுக்கம்
கொழும்பு: இலங்கை இன்று அதிகாலையில் நில அதிர்வுகள் உணரப்பட்டன.
அதிகாலை 2.33 மணிக்கு இந்த நிலநடுக்கம் இலங்கை கடல் பகுதியில் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 6 புள்ளிகளாக பதிவாகி இருந்தது.
கொழும்பு நகரில் இருந்து தெற்கு - தென்கிழக்கு திசையில் சுமார் ஆயிரத்து 151 கிமீ தொலைவை மையமாகக் கொண்டு, 20 கிமீ ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக அலாஸ்கா சுனாமி எச்சரிக்கை மையம் தகவல் வெளியிட்டுள்ளது.
எனினும் இந்த நிலநடுக்கத்தால் இலங்கையில் பாதிப்பு ஏதும் ஏற்படவில்லை. சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்படவில்லை.
Comments
Story first published: Monday, March 15, 2010, 17:50 [IST]