For Daily Alerts
Just In
உணவுப் பணவீக்கம் மீண்டும் உயர்வு
டெல்லி: உணவுப் பணவீக்கம் மீண்டும் உயரத் தொடங்கியுள்ளது. கடந்த வாரத்தைக் காட்டிலும் 0.19 சதவிகிதம் உயர்ந்து 16.74 சதவிகிதமாகிவிட்டது.
பருப்பு வருகைகள், காய்கறிகள், பழங்கள் மற்றும் பால் பொருள்களின் விலையில் ஏற்பட்ட உயர்வு காரணமாக, உணவுப் பணவீக்கமும் உயர்ந்திருப்பதாக மத்திய நிதி அமைச்சகம் இன்று அறிவித்துள்ளது.
பருப்பு வகைகளின் விலையில் 31 சதவிகித உயர்வு கடந்த வாரத்தில் ஏற்பட்டது. பால் பொருள்கள் 21.1 சதவிகிதமும், பழங்கள் விலை 18.7 சதவிகிதமும் உயர்ந்துள்ளது.
உருளைக் கிழங்கு மற்றும் வெங்காயத்தின் விலை முறையே 30.87 மற்றும் 12.27 சதவிகிதம் உயர்ந்துள்ளது கடந்த வாரத்தில்.
ஏப்ரல் மாத நிலவரப்படி, பொதுப் பணவீக்கம் 9.59 சதவிகிதமாக உள்ளது.
Comments
Story first published: Friday, June 11, 2010, 13:13 [IST]