For Daily Alerts
Just In
திலகவதி டிஜிபியாக பதவி உயர்வு-தமிழகத்தின் 2வது பெண் டிஜிபி
சென்னை: தமிழகத்தின் 2வது பெண் டிஜிபியாக, திலகவதி ஐபிஎஸ் பதவி உயர்வு பெற்றுள்ளார்.
தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையத் தலைவராக அவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
இதற்கான உத்தரவை தமிழக அரசு பிறப்பித்துள்ளது. தமிழகத்தின் முதல் பெண் ஐபிஎஸ் அதிகாரியான திலகவதி, தற்போது தமிழகத்தின் 2வது பெண் டிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஏற்கனவே லத்திகா சரண் தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபியாக இருந்து வருவது நினைவிருக்கலாம்
Comments
Story first published: Thursday, June 17, 2010, 9:11 [IST]