இந்திய தலைமைத் தேர்தல் ஆணையராக குரேஷி நியமனம்

புதன்கிழமை, ஜூலை 28, 2010, 10:29 [IST]
டெல்லி: இந்திய தலைமை தேர்தல் ஆணையராக சஹாபுதீன் யாகூப் குரேஷி (63) நியமிக்கப்பட்டுள்ளார்.

தலைமை தேர்தல் ஆணையராக உள்ள நவீன் சாவ்லா, நாளை (ஜூலை 29) ஓய்வு பெறுகிறார். இதையடுத்து தேர்தல் ஆணையராக உள்ள குரேஷி, தலைமைத் தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இதற்கான உத்தரவை குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீல் வெளியிட்டார்.

மத்திய தலைமை தேர்தல் ஆணையராக இஸ்லாமியர் ஒருவர் நியமிக்கப்படுவது இதுவே முதல் முறையாகும். இந்தப் பதவியில் குரேஷி இரண்டு ஆண்டுகள் இருப்பார்.

1971ம் ஆண்டு ஐஏஎஸ் ஹரியாணா கேடர் அதிகாரியான குரேஷி மத்திய, மாநில அரசுகளில் பல்வேறு பதவிகளை வகித்துள்ளார்.

மத்திய அரசில் தேசிய எஸ்ட்ஸ் கட்டுப்பாட்டு இயக்கத்தின் டைரக்டர் ஜெனரல், தூர்தர்ஷன் டைரக்டர் ஜெனரல், ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ராஜிவ் காந்தி தேசிய இளைஞர் வளர்ச்சிக் கழகத்தின் இயக்குனர், மத்திய விளையாட்டுத்துறைச் செயலாளர் ஆகிய பதவிகளை வகித்துள்ளார்.

2006ம் ஆண்டில் தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டார்.
Posted by:
User Comments
நாஞ்சிலான் 28 Jul 2010 08:42 pm
"பத்தோடு பதினொன்று,அத்தோடு இதுவும் ஓன்று"என்றில்லாமல்-பாரபட்சமில்லாமல் நேர்மை,நியாயம்,துணிவுடன் தங்கள் பனி சிறக்க வாழ்த்துக்கள்!!!
s k manoharan kulithalai 28 Jul 2010 07:47 pm
தலைமை தேர்தல் ஆணையர் நவீன் சாவ்லா அவர்கள் 07 .05 .2009 அன்று எந்த சட்டப்பிரிவு படி வாக்கு சாவடிக்குள் தம் குடும்பத்தினர் பெயர்களை வாக்காளர் பட்டியலில் சேர்த்து தாம் தம் குடும்பத்தாரோடு வாக்களித்ததையும் குறிப்பிடுவாரா இந்திய தலைமை தேர்தல் ஆணையராகும் சஹாபுதீன் யாகூப் குரேஷி அவர்கள்.
[ கருத்தை எழுதுங்கள் ]
1st Preliminary Final , Subrata Roy Sahara Stadium, Gahunje
Match starts at 08:00 pm IST