சென்னை சிறுவன் படுகொலை-பூவரசியின் ஜாமீன் மனு தள்ளுபடி

வியாழக்கிழமை, ஜூலை 29, 2010, 14:06 [IST]
சென்னை: சென்னை சிறுவன் ஆதித்யா படுகொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள இளம் பெண் பூவரசியின் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

கள்ளக்காதலில் தோல்வி அடைந்ததால், அதிருப்தி அடைந்த இளம் பெண் பூவரசி, தனது கள்ளக்காதலர் ஜெயக்குமாரின் ஒன்றரை வயதுக் குழந்தை ஆதித்யாவை கொலை செய்து பிணத்தை சூட்கேஸில் அடைத்து புதுச்சேரிக்கு கொண்டு சென்று அங்கு பஸ்சில் போட்டு விட்டு வந்தார்.

பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த கொலை வழக்கில், பூவரசி கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவுடன் ஜார்ஜ்டவுன் கோர்ட்டில் அவர் சார்பில் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் அங்கு மனு தள்ளுபடியாகி விட்டது. இதையடுத்து சென்னை செஷன்ஸ் கோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார் பூவரசி.

அந்த மனு நேற்று நீதிபதி தேவதாஸ் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

பூவரசி சார்பில் ஆஜரான வக்கீல் கிருஷ்ணமூர்த்தி வாதாடும்போது, பூவரசி மீது தேவை இல்லாத குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது என்றார்.

ஆதித்யாவின் தந்தை ஜெயக்குமார் சார்பில் ஆஜரான வக்கீல், ஜாமீன் வழங்க எதிர்ப்பு தெரிவித்து மனுதாக்கல் செய்வதாக கூறினார். இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி, ஜாமீன் மனு விசாரணையை தள்ளி வைத்தார். இன்றைக்குள் அரசு பதிலளிக்குமாறு உத்தரவிட்டிருந்தார்.

அதன்படி அரசுத் தரப்பி்ல இன்று வாதிடுகையில், இன்னும் விசாரணை முடியவில்லை. எனவே பூவரசிக்கு ஜாமீன் அளிக்கக் கூடாது என்று கோரப்பட்டது. இதை ஏற்ற நீதிபதி பூவரசியின் மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
Posted by:
User Comments
சமூக கூடம் 29 Jul 2010 11:47 pm
ஒரு பக்கம் சிறுவனை இழந்த தாய், மறுபக்கம் தான் திரும்ப திரும்ப ஏமாற்றப்பட்டதாக கருதி அதற்காக பழி வாங்கும் எண்ணமுடைய காதலி இவர்களுக்கு நடுவில் இருவரையும் ஏமாற்றி அவர்களுடன் உடல் சுகம் அனுபவித்துவந்த ஆண்மகன் என்ற போர்வையில் ஒரு கயவன், இவர்களது வாழ்கை போராட்டத்தில் பலியான சிறுவன். இதற்கு என்ன தண்டனை யாருக்கு கொடுப்பது என்பதுதான் சர்ச்சைக்கு உரியதாகிறது.
சமுக நலம் விரும்பி 29 Jul 2010 08:44 pm
ஒரு ஆண் பலி வாங்கி இருந்தால் என்ன செய்யும் சட்டம் . பெண்ணை போதை பொருளாய் பார்க்கும் வரை பெண் செய்யும் தவறுகள் தெரியாது. பெண்ணின் அனுமதி இல்லாமல் ஒரு ஆண் அவளை தொடவே முடியாது. நாளை சமுக துரோகிகளாக பெண் மாறக்கூடும். தண்டனை குறைந்த பட்ச தண்டனை அப்பெண் பெற வேண்டும். ஆணுக்கு துரோகம் பெண்ணையும் தண்டிக்க சட்டம் வரணும்.
[ கருத்தை எழுதுங்கள் ]
1st Preliminary Final , Subrata Roy Sahara Stadium, Gahunje
Match starts at 08:00 pm IST