தினத்தந்தி அதிபர் சிவந்தி ஆதித்தன் மகள் மாலா மரணம்-கருணாநிதி இரங்கல்

வியாழக்கிழமை, ஜூலை 29, 2010, 14:03 [IST]
சென்னை: தினத்தந்தி அதிபர் சிவந்தி ஆதித்தன் மகள் மாலா ஜெயராமையா வெளிநாட்டில் மரணமடைந்தார். இதையடுத்து முதல்வர் கருணாநிதி இரங்கல் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக முதல்வர் விடுத்துள்ள இரங்கல் செய்தியில், சிவந்தி ஆதித்தன் மகள் மாலா ஜெயராமையா வெளிநாடு சென்ற இடத்தில் இயற்கை எய்திய செய்தி கேட்டு மிகுந்த அதிர்ச்சியும், வேதனையும் அடைகிறேன்.

இந்த இழப்பு தினத்தந்தி நாளிதழ், மற்றும் நண்பர் சிவந்தி ஆதித்தன் அவர்களுக்கும், அவரது குடும்பத்தாருக்கும் ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும்.

மிகுந்த துன்பமும், துயரமும் அடைந்துள்ள நண்பர் சிவந்தி ஆதித்தன் அவர்களுக்கும், அவரது குடும்பத்தாருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன் எனத் தெரிவித்துள்ளார்.
Posted by:
User Comments
கர்நாடக 30 Jul 2010 12:40 pm
same news has to come in dinamalar for Jayalalitha. she is dupakur lady
இலங்கையன் 29 Jul 2010 05:58 pm
எல்லோருக்கும் இரங்கல் வரும். ஆனால் உங்கள் இரண்டு பேருக்கும் வந்தப் பிறகு தான் மற்றவர்களுக்கு. இலங்கையன்
[ கருத்தை எழுதுங்கள் ]
1st Preliminary Final , Subrata Roy Sahara Stadium, Gahunje
Match starts at 08:00 pm IST