கள்ளக்குறிச்சியில் காதல் தகராறில் கல்லூரி ஆசிரியை கடத்தல்

வியாழக்கிழமை, ஜூலை 29, 2010, 17:07 [IST]
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் காதல் மணம் புரிந்த தங்களது மகளை அவரது தாயார், சகோதரர், தாய்மாமா மகன் ஆகியோர் கடத்திச் சென்று விட்டதாக கல்லூரி ஆசிரியையின் கணவர் புகார் கூறியுள்ளார்.

கள்ளக்குறிச்சி அருகே உள்ள திம்மலை என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் ஏழுமலை (24). இவர் அதே ஊரைச் சேர்ந்த சரண்யா என்பவரின் வீட்டில் டிரைவராக இருந்தார். சரண்யா தனியார் பொறியியல் கல்லூரியில் ஆசிரியையாக இருந்து வருகிறார்.

இருவருக்கும் காதல் மலரவே, வீட்டை விட்டு வெளியேறி திண்டிவனத்தில் பதிவு திருமணம் செய்து கொண்டு, திருகருக்கல் என்ற இடத்தில் தனிக்குடித்தனம் நடத்தி வந்துள்ளார்கள்.

இந்த நிலையில், நேற்று மாலை சரண்யா கல்லூரியை விட்டு வெளியே வந்தபோது, அவரது தாயார் ஜெயசித்தமேரி, அண்ணன் சக்ரவர்த்தி, தாய்மாமன் மகன் ரவி ஆகியோர் காரில் கடத்திச் சென்றதாக கூறப்படுகிறது.

இது குறித்து விழுப்புரம் தாலுகா காவல் நிலையத்தில் ஏழுமலை புகார் செய்துள்ளார். போலீஸார் வழக்குப் பதிவு செய்து கடத்தப்பட்டதாக கூறப்படும் சரண்யாவைத் தேடி வருகின்றனர்.
Posted by:
User Comments
கும்பாஉருட்டி 29 Jul 2010 07:14 pm
ஏழுமலை ஓழுமலயாகி,இப்பம் பாழ்மலை ஆகிவிட்டான்,பாவம்!
நிதஈஓல்ட் நேம் வித் அனந்த 29 Jul 2010 06:49 pm
தம்பி ஞானி யின் கருத்து நல்ல கருத்து அனல் இது ரஞ்சி இக்கு பொருந்தாது
[ கருத்தை எழுதுங்கள் ]
1st Preliminary Final , Subrata Roy Sahara Stadium, Gahunje
Match starts at 08:00 pm IST