பெரம்பலூர் : பெரம்பலூரில் பாஸ்போர்ட் கிளியரன்ஸ் சர்ட்டிபிகேட் வழங்க லஞ்சம் வாங்கிய போலீஸ் ஏட்டு கைது செய்யப்பட்டார்.
பெரம்பலூர் மாவட்டம் மேட்டுத்துரை பகுதியைச் சேர்ந்தவர் ஜட்ஜ் (29). இவரது மனைவி கீதா ராணி. இவர் பாஸ்போர்ட் வேண்டி பாஸ்போர்ட் அலுவலகத்திற்கு விண்ணப்பத்திருந்தார்.
இதனால், பாஸ்போர்ட் வழங்க போலீஸ் விசாரணைக்காக ஆறுமுகம் என்ற ஏட்டு, கீதா ராணி வீட்டிற்கு வந்தார். அப்போது அவர், ரூ. 500 லஞ்சம் தந்தால் மட்டுமே கிளியரன்ஸ் சர்டிபிகேட் தரமுடியும் என மிரட்டியுள்ளார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த கீதா ராணி இது குறித்து அவரது கணவர் ஜட்ஜிடம் கூறியுள்ளார். உடனே, ஜட்ஜ் இந்த சம்பவம் பற்றி திருச்சி லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் கொடுத்துள்ளார்.
இதையடுத்து, லஞ்ச ஒழிப்பு போலீசார் ராசாயனம் தடவிய நோட்டுக்களை ஜட்ஜ்-க்கு கொடுத்தனர். அதை அவர் ஏட்டு ஆறுமுகத்திடம் லஞ்சமாக கொடுத்தார்.
அப்போது, அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார், ஏட்டு ஆறுமுகத்தை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். இப்படி லஞ்சம் கொடுத்தால் தானே கிளியரன்ஸ் சர்ட்டிபிகேட்டே வாங்க முடிகிறது...!
பெரம்பலூர் மாவட்டம் மேட்டுத்துரை பகுதியைச் சேர்ந்தவர் ஜட்ஜ் (29). இவரது மனைவி கீதா ராணி. இவர் பாஸ்போர்ட் வேண்டி பாஸ்போர்ட் அலுவலகத்திற்கு விண்ணப்பத்திருந்தார்.
இதனால், பாஸ்போர்ட் வழங்க போலீஸ் விசாரணைக்காக ஆறுமுகம் என்ற ஏட்டு, கீதா ராணி வீட்டிற்கு வந்தார். அப்போது அவர், ரூ. 500 லஞ்சம் தந்தால் மட்டுமே கிளியரன்ஸ் சர்டிபிகேட் தரமுடியும் என மிரட்டியுள்ளார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த கீதா ராணி இது குறித்து அவரது கணவர் ஜட்ஜிடம் கூறியுள்ளார். உடனே, ஜட்ஜ் இந்த சம்பவம் பற்றி திருச்சி லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் கொடுத்துள்ளார்.
இதையடுத்து, லஞ்ச ஒழிப்பு போலீசார் ராசாயனம் தடவிய நோட்டுக்களை ஜட்ஜ்-க்கு கொடுத்தனர். அதை அவர் ஏட்டு ஆறுமுகத்திடம் லஞ்சமாக கொடுத்தார்.
அப்போது, அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார், ஏட்டு ஆறுமுகத்தை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். இப்படி லஞ்சம் கொடுத்தால் தானே கிளியரன்ஸ் சர்ட்டிபிகேட்டே வாங்க முடிகிறது...!








