For Daily Alerts
Just In
தொழில்நுட்பக் கோளாறு-கிளம்பாமலேயே பிருத்வி-2 சோதனை தோல்வி
முற்றிலும் இந்தியத் தொழில்நுட்பத்துடன் உருவாக்கப்பட்ட அணு ஆயுதங்களை ஏந்திச் சென்று தாக்கக் கூடிய திறன் படைத்த ஏவுகணைதான் பிருத்வி-2. பலமுறை பரிசோதிக்கப்பட்ட இந்த ஏவுகணை இன்று யூசர் டிரையலுக்கு விடப்பட்டது. ஆனால் ஏவுகணை கிளம்பவே இல்லை. தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ஏவுகணை கிளம்பவில்லை என்று தெரிவிக்கப்பட்டது.
சந்திப்பூரில் உள்ள ஒருங்கிணைந்த ஏவுகணைப் பரிசோதனை மையத்தில் இன்று காலை இந்த சோதனைக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதுகுறித்து அதிகாரி ஒருவர் கூறுகையில், ஏவுகணையிலோ அல்லது லாஞ்சரிலோ ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாகவே ஏவுகணை கிளம்பவில்லை என்று சந்தேகிக்கிறோம்.
Comments
Story first published: Friday, September 24, 2010, 18:39 [IST]