தனது பங்கைப் பெற உச்சநீதிமன்றத்தை நாடுகிறது புதுச்சேரி அரசு
காரைக்கால்: காவிரி நீரில் தனது பங்கைப் பெறுவதற்கு உச்சநீதிமன்றத்தை நாடவுள்ளது புதுச்சேரி அரசு.
காவிரி நீரில் புதுச்சேரி அரசுக்கும் சிறிய பங்கு உண்டு. இந்த நிலையில் காவிரியில் தனது பங்கு நீரைப் பெற அது உச்சநீதிமன்றத்தை நாடவுள்ளது.
இதுகுறித்து காரைக்கால் வந்த மத்திய அமைச்சர் நாராயணசாமி செய்தியாளர்களிடம் பேசுகையில், நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பின்படி, தமிழகம், புதுவை மாநிலங்களுக்கு தண்ணீர் தர கர்நாடகம் மறுத்து வருகிறது. இந்த விஷயத்தில், தமிழக அரசு போன்று புதுவை அரசும் நீதிமன்றத்தை அணுக முடிவு செய்துள்ளது.
புதுச்சேரி உப்பளம் பகுதியிலிருந்து அகதிகளை ஏற்றிக் கொண்டு ஆஸ்திரேலியாவுக்கு செல்ல இருந்த படகு காரைக்காலில் சிக்கியது. இது தொடர்பாக புதுச்சேரியில் 4 பேரும், காரைக்காலை சேர்ந்த இருவரும் கைதாகியுள்ளனர்.
நாகூர்-காரைக்கால் இடையிலான புதிய அகல ரயில்பாதை பணிகளை 2011 பிப்ரவரியில் முடிக்க வலியுறுத்தப்பட்டுள்ளது என்றார் நாராயணசாமி.