For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இந்துக்களுக்கு துரோகம் இழைத்து வருகிறது ஆர்.எஸ்.எஸ்.-அகில இந்திய இந்து மகாசபை

Google Oneindia Tamil News

ஜலந்தர்: அயோத்தியில் ராமர் கோவில் இருந்த இடத்தைக் கைப்பற்றி தனது சொத்துக்களை அதிகரித்துக் கொள்ளும் ஒரே நோக்கம் மட்டுமே ஆர்.எஸ்.எஸ்.ஸிடம் இருந்தது என்று குற்றம் சாட்டியுள்ளது அகில இந்திய இந்து மகாசபை அமைப்பு.

இதுகுறித்து அமைப்பின் செய்தித் தொடர்பாளர் ஷத்திரியா கூறுகையில், அயோத்தியில் ராமர் கோவில் கட்டும் உரிமை இந்து மகாசபைக்கும், நிர்மோகி அகாராவுக்கும் மட்டுமே உள்ளது. இதில் ஆர்.எஸ்.எஸ்.ஸுக்கு எந்த வேலையும் இல்லை.

ஆனால் அயோத்தி இடத்தைக் கைப்பற்றி தனது சொத்தைப் பெருக்கும் நோக்கில்தான் தொடர்ந்து செயல்பட்டு வந்தது ஆர்.எஸ்.எஸ். தனது சுயநலனுக்காக அது இந்துக்களை தொடர்ந்து ஏமாற்றிக் கொண்டிருக்கிறது.

தற்போது இந்தியாவில் இந்துக்களின் அவல நிலைக்கு ஆர்.எஸ்.எஸ். அமைப்பே காரணம். இந்துக்களின் நலன் விரும்பி போல தன்னைக் காட்டிக் கொண்டு இந்துக்களை தொடர்ந்து ஏமாற்றி வருகிறது ஆர்.எஸ்.எஸ்.

ஆரம்பத்திலிருந்தே இந்துக்களை ஏமாற்றுவதே அதன் வேலையாக இருந்து வருகிறது என்றார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X