For Daily Alerts
Just In
'குரக்கன்' மாவும், 'ராஜா' ராஜபக்சேவும்!
சமீபத்தில் ராஜபக்சே தனது அமைச்சரவை சகாக்களை அழைத்துப் பேசிக் கொண்டிருந்தார். அப்போது அவர் இலங்கையில் முன்பு ஆண்ட ராஜசிங்கன் மன்னனோடு தன்னை ஒப்பிட்டு பேசியுள்ளார்.
அவர் கூறுகையில், "ராஜசிங்க மன்னன் குரக்கன் மாவிலான (கேழ்வரகு மாவு) உணவு பொருட்களையே அதிகம் விரும்பி சாப்பிட்டுள்ளான். நானும், குரக்கன் மாவு பொருட்களையே விரும்பி சாப்பிடுகிறேன். எனவே என்னையும் ராஜசிங்க மன்னுடன் ஒப்பிடலாம்," என்றார்.
ஆமா, ஆமா, ஆமாமாமா!
இதனைக் கேட்டுக் கொண்டிருந்த அமைச்சர்கள் அனைவரும் ஆமாம் ஆமாம் என்று பலமாக ஆமோதித்தனராம்!
ஏற்கெனவே பல முறை தன்னை மன்னனுக்கு நிகரானவராகவும், இலங்கையின் பேரரசனாகவும் காட்டிக் கொள்ள முயன்றுள்ளார் ராஜபக்சே. பழங்கால மன்னர்களைப் போல அரண்மனை தர்பார் மண்டபத்தில் அமர்ந்து ஆட்சி செய்ய வேண்டும் என்பது அவரது விருப்பமாம்.
Comments
Story first published: Friday, November 12, 2010, 10:44 [IST]