Thought for the day
Your page will load in ...
Close Ad X
Advertisement
English Hindi ગુજરાતી ಕನ್ನಡ മലയാളം తెలుగు
 
Share This Story

தமிழக பஸ் எரிப்பு வழக்கில் என்ஐஏ குற்றப்பத்திரிக்கை தாக்கல்

Posted by:
Published: Friday, December 17, 2010, 16:45 [IST]

கொச்சி: கேரளாவில் தமிழக பஸ் எரிக்கப்பட்ட வழக்கில் என்ஐஏ (தேசிய புலனாய்வு ஏஜென்சி) இன்று குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தது.

கடந்த 2005-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 9-ம் தேதி கேரள மாநிலம் கலமசேரியில் தமிழ் நாடு அரசுப் பேருந்து தீ வைத்து எரிக்கப்பட்டது. கோயம்புத்தூர் குண்டு வெடிப்பு வழக்கில் மதானி கைது செய்யப்பட்டிருந்ததற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அவரது ஆதரவாளர்கள் பேருந்தை எரித்தனர்.

இந்த வழக்கு விசாரணையை என்ஐஏ நடத்தி வருகிறது. இந்நிலையில் என்ஐஏ இன்று சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி எஸ். விஜயகுமார் முன்பு குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தது.

இந்த வழக்கில் மொத்தம் 13 பேர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. பெங்களூர் குண்டு வெடிப்பில் தொடர்புடைய லஷ்கர் இ தொய்பா தீவிரவாதி என்று கருதப்படும் நசீர் தான் இந்த வழக்கின் முதல் குற்றவாளி. மதானியின் மனைவி சூபியா மதானி 10-வது குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார். மேலும், 3 குற்றவாளிகள் தலைமறைவாகியுள்ளனர்.

English summary
NIA has filed the chargesheet in Kalamassery bus burning case. TNSTC bus was burnt on september 9, 2005 in Kalamassery in Kerala. PDP leader Madhani"s suporters did this as a protest against the arrest of their leader in Coimbatore blast case. Madhani"s wife Sufiya is the 10th accused.
கருத்தை எழுதுங்கள்
Click here to type in Tamil
Subscribe Newsletter
Qualifier 1 , Feroz Shah Kotla, Delhi
Match starts at 08:00 pm IST