For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

உ.பி. சிறுமியை பகுஜன் சமாஜ் கட்சி எம்.எல்.ஏ. கற்பழித்தது உண்மையே-போலீஸ்

Google Oneindia Tamil News

லக்னோ: உ.பி. மாநிலம் பந்தா பகுதியைச் சேர்ந்த சிறுமியை பகுஜன் சமாஜ் கட்சியின் எம்.எல்.ஏ புருஷோத்தம் நரேஷ் திவிவேதி கற்பழித்தது உண்மைதான் என்று சிபிசிஐடி போலீஸார் தெரிவித்துள்ளனர்.

அந்த சிறுமியின் வயது 17. சமீபத்தில் இந்த சிறுமியைக் கற்பழித்தார் திவிவேதி என்று குற்றச்சாட்டு எழுந்தது. ஆனால் அதிரடியாக அந்த சிறுமி மீது திருட்டுப் பட்டம் கட்டி போலீஸில் புகார் செய்து கைது செய்யவும் வைத்து விட்டார் திவிவேதி. இது உ.பியில் பெரும் புயலைக் கிளப்பியது.

இதையடுத்து இந்த வழக்கை சிபிசிஐடி போலீஸ் விசாரணைக்கு அனுப்பினார் முதல்வர் மாயாவதி. மேலும், திவிவேதியும் கட்சியிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

தற்போது சிறுமியை திவிவேதி கற்பழித்தது உண்மைதான் என்று சிபிசிஐடி போலீஸ் விசாரணை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து மூத்த காவல்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், சிபிசிஐடி விசாரணை நடந்து வருகிறது. தொடக்க கட்ட விசாரணையின்படி குற்றம் நடந்தது உண்மை என்று தெரிய வந்துள்ளது. விரைவில் இந்த தொடக்க கட்ட விசாரணை அறிக்கை முதல்வரிடம் அளிக்கப்படும்.

மேலும், சிறுமி மீது எம்.எல்.ஏ கொடுத்த திருட்டுப் புகாரும் பொய்யானது என்றும் தெரிய வந்துள்ளது.

இதுவரை 12க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்தியுள்ளோம் என்றார்.

முன்னதாக கோர்ட்டில் ஆஜரான சிறுமி நீதிபதி ரவிக்குமார் குப்தாவிடம், தன்னை திவிவேதி 2 முறை கட்டாயப்படுத்திக் கற்பழித்தார். அவருடன் இருந்த கூட்டாளிகள் சிலரும் தன்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தினர் என்று கூறியிருந்தார்.

இதையடுத்தே போலீஸ் விசாரணைக்கு கோர்ட் உத்தரவிட்டது. ஆனால் அதற்குள் சிறுமி மீது திருட்டுப் புகார் கூறி அவரை பந்தா போலீஸ் நிலையம் மூலமாக கைது செய்ய வைத்து சிறைக்கு அனுப்பி விட்டார் திவிவேதி.

இதன் மூலம் பந்தா போலீஸாரும், திவிவேதிக்கு உடந்தையாக இருந்தது அம்பலமானது. இதையடுத்தே சிபிசிஐடி விசாரணைக்கு உ.பி. அரசு உத்தரவிட்டது.

English summary
A preliminary inquiry by the CB-CID into the Banda rape case in UP has found that BSP MLA Purushottam Naresh Dwiwedi had raped the teenager and framed her in a false theft case, official sources said. "The CB-CID, which was asked to probe the matter by Chief Minister Mayawati, has completed a preliminary inquiry and is ready with its report," a senior official said. During preliminary inquiry, it was found that the 17-year-old girl was not only raped by the MLA, but was also framed in a false theft case, the sources said. The girl, who appeared before civil judge junior division Ravi Kumar Gupta on Monday, alleged in her statement that Dwiwedi raped her twice while his aides teased her, prosecution sources said. The BSP has suspended Trivedi from the party.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X