For Daily Alerts
Just In
குண்டுவெடிப்பு குற்றவாளிக்கு தோசையெல்லாம் தர முடியாது: கோவா நீதிபதி
பனாஜி: நீதிமன்றக் காவலில் இருக்கையில் தோசை கேட்ட குண்டுவெடிப்பு வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளின் கோரிக்கையை கோவா நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
சனதான் சான்ஸ்தா என்னும் இந்து அமைப்பைச் சேர்ந்தவர்கள் வினாயக் பாட்டீல், வினய் தாலேகர், தனஞ்செய் அஷ்தேகர் மற்றும் திலிப் மங்கான்கர். இவர்கள் அனைவரும் கடந்த 2009-ம் ஆண்டு கோவாவில் தீபாவளிக்கு முன்தினம் நடந்த மத ஊர்வலத்தில் வெடிகுண்டு தாக்குதல்கள் நடத்தினர்.
தற்போது இவர்கள் அனைவரும் நீதிமன்றக் காவலில் உள்ளனர். காவலில் உள்ள தங்களுக்கு தோசை வழங்கக் கோரி கோவா நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தனர்.
மனுவை விசாரித்த நீதிபதி அவர்கள் கோரிக்கையை நிராகரித்து தீர்ப்பளித்தார்.
Comments
English summary
A Goa court has rejected to accept the plea of the Hindu rightwing group Sanatan Sanstha members who have asked to serve dosa as a snack during judicial custody. These people are accused of planning and carrying out the 2009 IED blasts in Goa on diwali eve.
Story first published: Friday, May 20, 2011, 13:48 [IST]