ஜம்மு காஷ்மீர்: 20 மணி நேர துப்பாக்கி்ச்சூட்டில் 3 தீவிரவாதிகள் கொலை
புல்வாமா: ஜம்மு காஷ்மீ்ர் மாநிலத்தின் புல்வாமா மாவட்த்தில் ராணுவத்திற்கும், தீவிரவாதிகளுக்கும் இடையே நடந்த துப்பாக்கிச் சூட்டில் 3 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர், ஒரு ராணுவ அதிகாரி காயம் அடைந்தார்.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தி்ன் புல்வாமா மாவட்டத்தில் உள்ள ஒரு வீட்டில் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக ராணுவத்தினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து ராணுவ அதிகாரிகள் அந்த வீட்டை சுற்றிவளைத்து தீவிரவாதிகளை சரண் அடையுமாறு கூறினர். ஆனால் அவர்கள் ராணுவத்தினர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர். பதிலுக்கு ராணுவத்தினரும் துப்பாக்கிச் சூடு நடத்தினர். சுமார் 20 மணி நேரம் நடந்த இந்த துப்பாக்கிச் சூட்டில் ஜெய்ஷ் ஏ முகமது அமைப்பு தீவிரவாதி உள்பட 3 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். மேலும், ஒரு ராணுவ அதிகாரி காயமடைந்தார்.
பாகிஸ்தானைச் சேர்ந்த இஹ்சான் பாய், புல்வாமாவைச் சேர்ந்த ஜாவித் நெங்குரூ மற்றும் பரூக் அகமது லோனே ஆகியோர் தான் இறந்த தீவிரவாதிகள். இதில் இஹ்சான் பாய் கடந்த 10 ஆண்டுகளாக காஷ்மீரில் இருந்துள்ளான். பொதுமக்கள், பாதுகாப்பு படையினர் மற்றும் அரசியல்வாதிகள் மீது நடத்தப்பட்ட பல தாக்குதல்களில் இவனுக்கு தொடர்பு உண்டு.
இந்த தாக்குதல் கடந்த 9-ம் தேதி நடந்தது. அதன் வீடியோ சற்று நேரத்திற்கு முன் வெளியிடப்பட்டுள்ளது.