For Quick Alerts
For Daily Alerts
Just In
மதுரை, திருச்சியில் டைம்ஸ் ஆப் இந்தியா பதிப்புகள்- தொடங்கி வைத்தார் ஜெயலலிதா
டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழ் சில ஆண்டுகளுக்கு முன்பு சென்னையில் தனது பதிப்பைத் தொடங்கியது. இந்த நிலையில் தற்போது அது மதுரை, திருச்சிக்கும் கிளை பரப்பியுள்ளது.
மதுரை, திருச்சி கிளைகளின் தொடக்க விழா சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று நடந்தது. முதல்வர் ஜெயலலிதா கலந்து கொண்டு இரு நகர பதிப்புகளையும் தொடங்கி வைத்தார். மேலும் இரு நகர பதிப்புகளின் சிறப்பு மலர்களையும் அவர் அப்போது வெளியிட்டார்.
நிகழ்ச்சியில் டைம்ஸ் ஆப் இந்தியா குழுமத் தலைவர் பாஸ்கர் தாஸ், ஒருங்கிணைந்த துணைத் தலைவர் நைனன் தாரியன் ஆகியோரும் உடன் இருந்தனர்.
Comments
English summary
CM Jayalalitha today launched the Madurai and Trichy editions of Times of India daily. She launched the editions in Chennai.
Story first published: Wednesday, July 13, 2011, 16:46 [IST]