விநாயகர் சதுர்த்தியன்று மாஜி டிஜிபி வெங்கடேசன் வீட்டில் பிள்ளையார் சிலை திருட்டு
சென்னை: விநாயகர் சதுர்த்தி தினமான நேற்று முன்னாள் டிஜிபி வெங்கடேசன் வீட்டில் உள்ள விநாயகர் கோவிலில் வைக்கப்பட்டிருந்த சிலையை சிலர் திருடிச் சென்று விட்டனர். இதுகுறித்து நீலாங்கரை போலீஸில் புகார் தரப்பட்டுள்ளது.
சென்னை அருகே கொட்டிவாக்கம் ராஜா தெருவில் வசித்து வருபவர் எல்.என்.வெங்கடேசன். இவர் முன்னாள் டிஜிபி ஆவார். இவரது மனைவி ராணி வெங்கடேசன். இவர் முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ.
இவரது வீட்டுக்கு முன்பு வீட்டையொட்டி சிறிய விநாயகர் கோவிலைக் கட்டி வைத்துள்ளனர். அங்கு நேற்று விநாயகர் சதுர்த்தியையொட்டி சாமி கும்பிடச் சென்ற வெங்கடேசன், உள்ளே பிள்ளையார் சிலையைக் காணாமல் திடுக்கிட்டார். ரூ. 20,000 மதிப்புள்ள பளிக்குச் சிலை அது. இதுகுறித்து நீலாங்கரை காவ்ல நிலையத்தில் வெங்கடேசன் சார்பில் புகார் தரப்பட்டது.
சிலை திருடர்களைப் போலீஸார் வலை வீசி தேடி வருகின்றனர்.