அனைவரும் ஒற்றுமையுடன் செயல்பட்டு தீவிரவாதத்தை நசுக்க வேண்டும்- பிரதமர்

புதன்கிழமை, செப்டம்பர் 7, 2011, 13:38 [IST]
Political Parties Should Unite Crush Terrorism Pm Aid0091
டாக்கா: டெல்லி உயர்நீதிமன்ற வளாகத்தில் நடந்த குண்டுவெடிப்புச் சம்பவம் கடும் கண்டனத்துக்குரியது. அரசியல் கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்து தீவிரவாதத்தை நசுக்க வேண்டும் என்று பிரதமர் மன்மோகன் சிங் கூறியுள்ளார்.

வங்கதேசம் சென்றுள்ள பிரதமர் மன்மோகன் சிங், டெல்லி உயர்நீதிமன்ற குண்டுவெடிப்புச் சம்பவத்தைக் கண்டித்து அறிக்கை விட்டுள்ளார்.

அதில் அவர் கூறுகையில், இந்த சம்பவம் கடும் கண்டனத்துக்குரியது. இது மிகவும் கோழைத்தனமான ஒன்று. தீவிரவாதிகளின் இந்த சதிச் செயலுக்கு யாரும் பலியாகி விடக் கூடாது.

அரசியல் கட்சிகளும், பொதுமக்களும் ஒருங்கிணைந்து தீவிரவாதத்தை அடியோடு நசுக்க வேண்டும். நாம் அனைவரும் ஒன்றாக இருக்கிறோம் என்பதே தீவிரவாதிகளுக்கு நாம் தரும் சரியான பதிலடியாக இருக்க முடியும்.

நாட்டு மக்கள் அனைவரும் அமைதியுடனும், பொறுமையுடனும் இருந்த இந்த சவாலை சந்திக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார் பிரதமர்.
Posted by:
English summary
PM Manmohan Singh has urged all political parties should unite and crush the terrorism. He has condemned the Delhi HC blast incident. And called the people to be united and patient to takcle the terror menace. He dubbed the Delhi blast as a cowardly act.
User Comments
Kamaludin Muhamed 08 Sep 2011 12:08 pm
divide and rule : இந்த மின் அஞ்சல் விலாசமே பொய் மாதிரி தோற்றம் அளிக்கிறது. இதை மட்டும் நம்பி மாற்று மத சகோதரர்கள் ஒருவரை ஒருவர் துவேஷத்தோடு குறை கூறுவது எந்த விதத்தில் நியாயம் என்று புரியவில்லை. இதெல்லாம் அரசியல் கட்சிகளின் சித்து விளையாட்டுகள். பொதுமக்கள் அடிமைகளாகவும், மடையர்களாகவும் இருக்கும் வரை இந்த சித்து விளையாட்டுகள் தொடரும். தனிப்பட்ட ஒரு மதத்தையோ, அவர்கள் வணங்கும் கடவுளையோ தூஷிப்பது வாசர்களின் அறியாமையே. சிந்தியுங்கள், உங்களை நீங்களே தரம் தாழ்த்திக்கொள்ளாதீர்கள்.
GmagicRock 07 Sep 2011 05:54 pm
இந்தியா கடைசி வரைக்கும் சம்பவத்தைக் கண்டித்து அறிக்கை மட்டுமே விடும் .
[ கருத்தை எழுதுங்கள் ]
1st Preliminary Final , Subrata Roy Sahara Stadium, Gahunje
Match starts at 08:00 pm IST