நண்பர் வீட்டுக்கு விபச்சார அழகியை கூட்டி வந்த வாலிபர்- பொதுமக்கள் பிடித்து தர்ம அடி

செவ்வாய்க்கிழமை, அக்டோபர் 4, 2011, 9:18 [IST]
திருநெல்வேலி: வெளியூருக்குப் போவதால் வீட்டைப் பார்த்துக் கொள்ளச் சொல்லிச் சென்ற நண்பரின் வீட்டுக்கு, விபச்சார அழியை கூட்டிக் கொண்டு உல்லாசமாக இருக்க வந்த வாலிபரை அக்கம் பக்கத்தினர் பிடித்து தர்ம அடி கொடுத்து பின்னர் போலீஸில் ஒப்படைத்தனர்.

நெல்லை பாலபாக்கியா நகரைச் சேர்ந்தவர் சரவணன். இவரது நண்பரின் வீடு பேட்டை சாஸ்திரி நகரில் உள்ளது. காலாண்டு விடுமுறை என்பதால் சரவணனின் நண்பர் தனது குடும்பத்தோடு வெளியூர் போய் விட்டார். போகும்போது வீட்டைப் பார்த்துக் கொள்ளுமாறு கூறி சாவியையும் கொடுத்துச் சென்றார்.

இந்த நிலையில் சரவணன் மனதில் குயுக்தியான யோசனை தோன்றியது. விபச்சார அழகியை அழைத்து வந்து நண்பர் வீட்டில் உல்லாசமாக இருக்க முடிவு செய்த அவர் இதற்காக துர்கா என்ற பெண்ணை வரவழைத்தார்.

இரவு 11 மணிக்கு மேல் நண்பர் வீட்டுக்கு விபச்சாரப் பெண்ணுடன் வந்தார் சரவணன். இதைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். விரைந்து வந்து இருவரையும் பிடித்து தர்ம அடி கொடுத்தனர்.

பின்னர் இருவரையும் போலீஸில் ஒப்படைத்தனர். போலீஸார் இருவரையும் கைது செய்து வழக்குப் பதிவு செய்துள்ளனர். சரவணனை நம்பி வீட்டை ஒப்படைத்துச் சென்ற நண்பருக்குத் தகவல் கொடுக்கப்பட்டுள்ளது.
Posted by:
English summary
Nellai police have arrested a youth arrested for misusing his friend's house. The arrested person Saravanan brought a prostitute to his friend's house to spare some time. After noticing this the people who are residing nearby, caught and beaten them. Later they were handed over to the police.
User Comments
mansingh 05 Oct 2011 09:13 am
நண்பன் டா ,இப்படிதான் இருக்கனும்
Ponraj Mathialagan 04 Oct 2011 01:23 pm
ஊருல பத்து பாஞ்சி பிரண்டு வச்சிருக்கவன் எல்லாம் நிம்மதியா இருக்கான்... ஆனால் ஒரே ஒரு பிரெண்டை வச்சிக்கிட்டு ஊருக்கு போனவன் படுற பாடு இருக்கி....அய்யய்யய்யூ.......
[ கருத்தை எழுதுங்கள் ]
1st Preliminary Final , Subrata Roy Sahara Stadium, Gahunje
Kolkata Knight Riders won by 18 runs