For Daily Alerts
Just In
சென்னையில் 7 வாக்குச் சாவடிகளில் மறுபடியும் வாக்குப் பதிவு
சென்னை: சென்னை மாநகராட்சியில் தேர்தல் ஆணைய உத்தரவுப்படி 7 வாக்குச் சாவடிகளில் மறுவாக்குப் பதிவு நடந்தது.
பல்வேறு முறைகேடுகள், சட்டம் ஒழுங்குப் பிரச்சினை தொடர்பாக சென்னை மாநகராட்சியில் 7 வாக்குச் சாவடிகளில் இன்று மறு வாக்குப் பதிவு நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.
அதன்படி, வாக்குச்சாடி எண். 1836 (பெண்கள்), 1740 (ஆண்கள்), 1743 (ஆண்கள்), 1746 (அ.வா.), 1730 (ஆண்), 1730 (பெண்கள்), 1731 (அ.வா.) ஆகிய ஏழு வாக்குச் சாவடிகளில் இன்று காலை வாக்குப் பதிவு தொடங்கியது. மாலை 5 மணிக்கு இது முடிவடைந்தது.
இந்த வாக்குச் சாவடியில் வாக்களித்தவர்களுக்கு இடது கை நடு விரலில் அடையாள மை இடப்பட்டது.
Comments
English summary
Repolling for 7 booths in Chennai corporation has begun today. The repolling will continue till 5 pm.
Story first published: Thursday, October 20, 2011, 18:24 [IST]