பப்புவா நியூ கினியாவில் 7.3 ரிக்டர் நிலநடுக்கம்- உயிரிழப்பு இல்லை
பப்புவா நியூ கினியா: பப்புவா நியூ கினியாவில் 7.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் எந்த உயிர்சேதமும் ஏற்பட்டதாக தகவல் இல்லை.
பப்புவா நியூ கினியாவில் உள்ள லைய் நகரில் 115 கி.மீ. ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் 7.3 ரிக்டர் அளவில் இருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஆனால் உயிரிழப்பு ஏற்பட்டதாக தகவல் இல்லை. இந்த நிலநடுக்கத்தை யொட்டி, சுனாமி எச்சரிக்கையும் அளிக்கப்படவில்லை.
இது குறித்து லைய் இன்டர்நேஷ்னல் ஹேட்டலின் வரவேற்பாளர் டோலி கூறியதாவது,
2 முதல் 3 நிமிடங்கள் தொடர்ந்த நிலநடுக்கம் மிகவும் பெரிய அளவில் இருந்தது. ஹோட்டல் முழுவதும் அசைந்ததை, ஹேட்டலில் இருந்த அனைவரும் உணர்ந்தனர். ஹேட்டலின் சில சுவர்கள் மட்டும் லேசான பாதிப்படைந்தன. நிலநடுக்கத்தால் காயமோ, உயிரிழப்போ ஏற்பட்டதாக தகவல் இல்லை, என்றார்.
போர்ட் மோரிஸ்பியை சேர்ந்த மக்களும், இந்த நிலநடுக்கத்தை உணர்ந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.