டெல்லி: டெல்லியில் நடந்த ஹாக்கி போட்டிகளில், இந்தியாவை சேர்ந்த ஆண்கள் மற்றும் பெண்கள் அணிகள் வெற்றி பெற்றன. ஓலிம்பிக் போட்டிகளுக்காக தயாராகி வரும் இந்திய ஹாக்கி அணிகளுக்கு இந்த வெற்றி பெரும் உற்சாகத்தை அளித்துள்ளது.பெண்கள் அணி வெற்றி:டெல்லியில் உள்ள மேஜர் தயன்சந்த் தேசிய மைதானத்தில் இந்தியா, அஜர்பைஜான் பெண்கள் ஹாக்கி அணிகளுக்கு இடையிலான 4 போட்டிகள் கொண்ட ஹாக்கி தொடர் நடந்து வருகின்றது. இதில் நேற்று நடந்த 2வது போட்டியில் இந்திய பெண்கள் அணியின் ரிதுராணி 18வது நிமிடத்திலும், 41வது நிமிடத்தில் சபா அஞ்சும் தலா 1 கோல் அடித்தனர்.அஜர்பைஜான் அணியில் ஜெங்கோ கிம் 23வது நிமிடத்தில் 1 கோல் அடித்தார். இதன் மூலம் இந்திய அணி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இந்திய அணி 0-3 என்ற கோல் கணக்கில் முதல் போட்டியில் வெற்றி பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.ஆண்கள் அணி வெற்றி:டெல்லி மேஜர் தயன்சந்த் தேசிய மைதானத்தில் இந்தியா, தென் ஆப்பிரிக்கா ஆண்கள் ஹாக்கி அணிக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட ஹாக்கி தொடர் நடந்து வருகின்றது.இதில் நேற்று நடந்த முதல் போட்டியில், இந்திய அணியின் ஷிவேந்திர சிங் போட்டியின் 15வது நிமிடத்திலும், பிரேந்திர லக்ரா 24வது நிமிடத்திலும், சர்தாரா சிங் 28வது நிமிடத்திலும், உத்தப்பா 53வது நிமிடத்திலும் தலா 1 கோல் அடித்தனர். பதிலுக்கு தென் ஆப்பிரிக்கா வீரர்கள் யாரும் கோல் அடிக்கவில்லை. இதன் மூலம் இந்திய அணி 4-0 என்ற கோல் கணக்கில் போட்டியில் வெற்றிப் பெற்றது.இந்த போட்டிகளில் வெற்றிப் பெற்றதால், அடுத்த மாதம் துவங்க உள்ள ஓலிம்பிக் போட்டிகளுக்காக தயாராகி வரும் இந்தியா ஹாக்கி அணிகள் உற்சாகம் அடைந்துள்ளன.