For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

2 மாவட்ட கலெக்டர்கள் உள்பட 7 ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம்

Google Oneindia Tamil News

சென்னை: கோவை மற்றும் திருவாரூர் மாவட்ட ஆட்சித் தலைவர்கள் உள்பட 7 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

இதுதொடர்பாக தலைமைச் செயலாளர் தேவேந்திர நாத் சாரங்கி வெளியிட்டுள்ள உத்தரவு:

ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறை துணை செயலாளர் எஸ்.நடராஜன் இடமாற்றம் செய்யப்பட்டு, திருவாரூர் மாவட்ட கலெக்டராக நியமிக்கப்பட்டு உள்ளார்.

சிப்காட் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் ராஜேஷ் லக்கானி மாற்றப்பட்டு, தமிழ்நாடு சுற்றுலா மேம்பாட்டுக் கழக நிர்வாக இயக்குனராக நியமிக்கப்பட்டு இருக்கிறார்.

கோவை மாவட்ட கலெக்டராக எம்.கருணாகரன் நியமிக்கப்பட்டு உள்ளார். கோவை மாவட்ட கலெக்டர் டி.என். ஹரிகரன் மாற்றப்பட்டு, ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறை துணை செயலாளராக நியமிக்கப்பட்டு இருக்கிறார்.

சிப்காட் முன்னாள் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் டி.சபீதா, பள்ளிக் கல்வித் துறை செயலாளராக நியமிக்கப்பட்டு உள்ளார்.

பள்ளிக் கல்வித் துறை கூடுதல் தலைமை செயலாளரும், உயர்கல்வித் துறை செயலாளருமான (பொறுப்பு) டி.எஸ்.ஸ்ரீதர் மாற்றப்பட்டு, உயர் கல்வித் துறை கூடுதல் தலைமை செயலாளராக நியமிக்கப்பட்டு இருக்கிறார்.

தமிழ்நாடு சுற்றுலா மேம்பாட்டுக் கழக நிர்வாக இயக்குனர் சந்தோஷ் கே.மிஸ்ரா மாற்றப்பட்டு, தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகித நிறுவனத்தின் (டி.என்.பி.எல்.) நிர்வாக இயக்குனராக நியமிக்கப்பட்டு உள்ளார் என்று அதில் அவர் தெரிவித்துள்ளார்.

English summary
7 IAS officers including 2 district collectors have been shifted.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X