For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மார்ச் 18ம் தேதி சங்கரன்கோவில் இடைத் தேர்தல்-21ம் தேதி வாக்கு எண்ணிக்கை

Google Oneindia Tamil News

Election commission of India
சென்னை: சங்கரன்கோவில் (தனி) தொகுதிக்கான இடைத்தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் நேற்று இரவு வெளியிட்டது. அதன்படி மார்ச் 18ம் தேதி தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 21ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும்.

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து சங்கரன்கோவில் தொகுதியில் தேர்தல் நன்னடத்தை விதிகள் உடனடியாக அமலுக்கு வந்ததுள்ளன. இதனால்

தேர்தல் அட்டவணை

பிப்ரவரி 22ம் தேதி வேட்பு மனு தாக்கல் தொடங்குகிறது. பிப்ரவரி 29ம் தேதி வரை மனு தாக்கல் செய்யலாம். மார்ச் 1ம் தேதி மனுக்கள் பரிசீலனை நடைபெறும்.

மார்ச் 3ம் தேதிக்குள் வேட்பு மனுக்களைத் திரும்பப் பெறலாம்.மார்ச்18ம் தேதி வாக்குப் பதிவும், மார்ச் 21ம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெறும்.

மார்ச் 18ம் தேதி காலை 8 மணிக்கு வாக்குப் பதிவு தொடங்கி இடைவிடாமல் மாலை 5 மணி வரை நடைபெறும். மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் மூலம் வாக்குப் பதிவு நடைபெறும்.

English summary
Sankarankovil (sc) constituency will face the by election on March 18, the EC has said. Counting will be held on March 21.The election is to be held after legislator and state minister Karuppasamy passed away recently.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X