அதிமுகவில் இருந்து நடராஜனின் ஆதரவாளர்கள் 2 பேர் நீக்கம்: ஜெயலிலதா அதிரடி

புதன்கிழமை, பிப்ரவரி 22, 2012, 12:30 [IST]
சென்னை: சசிகலாவின் கணவர் நடராஜனின் ஆதரவாளர்கள் இருவரை அதிமுகவில் இருந்து நீக்கி முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

இது குறித்து தமிழக முதல்வரும், அதிமுக பொதுச் செயலாளருமான ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது,

திருச்சி மாவட்டம் உறையூர் 57வது வட்டத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் மலர்விழி, ஜெகநாதன் ஆகியோர் கட்சிக் கட்டுப்பாட்டை மீறும் வகையில் நடந்து கொண்டதோடு, கட்சிக்கு அவப் பெயரை ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டதால், இருவரும் கட்சியின் அடிப்படை உறுப்பினர் மற்றும் அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் நீக்கப்படுகின்றனர்.

இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.

நீக்கப்பட்ட மலர்விழி மற்றும் ஜெகநாதன் ஆகியோர் சசிகலாவின் கணவர் நடராஜனை போலீசார் கைது செய்தபோது அவருடன் இருந்ததால் கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Posted by:
English summary
ADMK general secretray cum CM Jayalalithaa has sacked 2 of Sasikala's husband Natarajan's supporters from the party. She has been sacking Sasikala and her relatives' supporters from the party.
User Comments
[ கருத்தை எழுதுங்கள் ]
இந்த கட்டுரைக்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே !
1st Preliminary Final , Subrata Roy Sahara Stadium, Gahunje
Kolkata Knight Riders won by 18 runs
2nd Preliminary Final , M Chinnaswamy Stadium, Bangalore
Match starts at 08:00 pm IST