மின் கம்பிகளில் துணி காயப் போடும் போராட்டம்-பாமக அழைப்பு

புதன்கிழமை, பிப்ரவரி 22, 2012, 12:40 [IST]
கரூர்: மின்வெட்டைக் கண்டித்து, மின் கம்பிகளில் துணி காய வைக்கும் போராட்டத்தை நடத்தப் போவதாக கரூர் மாவட்ட பாமக அறிவித்துள்ளது.

இதுகுறித்து பாமக மாநில துணைப் பொதுச் செயலாளர் பாஸ்கரன் கூறுகையில்,

தொடர் மின்வெட்டினால், மக்கள் மீளாத்துயருக்குள்ளாகியுள்ளனர். தொழிற்சாலைகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. பால், பஸ் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்த்தியுள்ள நிலையில், தொடர் மின்வெட்டினாலும் மக்கள் மனதளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்து இதற்கு தீர்வு காண வேண்டும், இல்லையெனில், கட்சி நிறுவனர் ராமதாஸ் அவர்களின் அனுமதிப் பெற்று, கரூர் மின்வாரிய அலுவலகத்தில் உள்ள மின்கம்பிகளில் துணிகாய வைக்கும் போராட்டம் நடத்தப்படும் என்றார் அவர்.
Posted by:
English summary
Karur PMK has called for a novel protest against power cut. Party's state deputy general secretary Baskaran said that we will dry the cloths in electric lines protesting against power cut with our party founder's permission.
User Comments
raaj 24 Feb 2012 01:45 pm
தமிழகம் ஒளிர்கிறது.
Raasappu Sinnathambi 23 Feb 2012 12:47 am
நீங்க எழுதின கமெண்ட விடுகிறிய இல்ல
Anbuchelian Raman 23 Feb 2012 12:13 am
இவன் துணிய காய வைக்கும் போது கரெக்டா கரண்ட்-அ வர வைக்கணும். ஜனதொகைய்ல் ஒரு எண்ணிக்கை கொறையும்.
Munaaf Munar 22 Feb 2012 11:18 pm
டாக்டர் ஐயாவுக்கு மற கலந்டுடுஜ்ஜோ ?
Thamizhan 22 Feb 2012 09:23 pm
அட என்னப்பா இவரு பெரிய காமெடி பண்றாரு ....... கூடங்குளம் அணு மின் நிலையம் வருவதையும் எதிர்க்கிறாரு, துணி காய போடவும் கூப்பிடுறாரு...
Komberi Mookan 22 Feb 2012 01:37 pm
டே பேக்கு .... பயமா இல்லையா நோக்கு ..... எவனாச்சிக்கு அடிக்க போகுது ஷாக்கு .... தொங்கப்போகுது அவன் நாக்கு .... அவன் இரையாக போறான் தீக்கு .... நீங்க ஆகப்போறீங்க லாக்கு ... கெடைக்க போகுது தூக்கு ...
Komberi Mookan 22 Feb 2012 01:15 pm
நீ மின் கம்பில துணிய காய வைக்கிறதா பேசு .... ஆனா எங்க மண்டை காய வைக்கிறமாதிரி பேசாத ....
R KUMAR 22 Feb 2012 01:00 pm
விசு சொல்லியிருக்கிறார் "சம்சாரம் அது மின்சாரம்" ஆகவே தமிழகத்தில் இருக்கும் எல்லா ஆண்களும் நிறைய திருமணம் செய்து கொண்டு வீடுகளில் சம்சாரங்க்களை அதிக அளவில் வைத்துக் கொண்டால்,மின்சாரம் பெருக வாய்ப்பு இருக்கிறது.
Nadodi Mannan 22 Feb 2012 12:51 pm
எவனாச்சும் ஒரு மடையன் ஷாக் அடிச்சு செத்தான்னா அதுக்கு பாமகதான் பொறுப்பேற்க வேண்டும்!
[ கருத்தை எழுதுங்கள் ]
   
1st Preliminary Final , Subrata Roy Sahara Stadium, Gahunje
Kolkata Knight Riders won by 18 runs
2nd Preliminary Final , M Chinnaswamy Stadium, Bangalore
Match starts at 08:00 pm IST