இந்தியாவில் 365 நாட்களில் 356 சிறுத்தைகள் பலி
டெல்லி: கடந்த 2011-ம் ஆண்டில் மட்டும் இந்தியாவில் 356 சிறுத்தைகள் உயிரிழந்துள்ளன. இவற்றில் 52 விழுக்காடு வேட்டைக்காக கொல்லப்பட்டுள்ளன.
வனவிலங்குகள் பாதுகாப்பு மையம் வெளியிட்டுள்ள புள்ளிவிவர அறிக்கையில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது.
2007-ம் ஆண்டில் 126
2008-ம் ஆண்டில் 161
2009-ம் ஆண்டில் 180
2010-ம் ஆண்டில் 180 என்றுதான் சிறுத்தைகள் எண்ணிக்கை இருந்தது.
2011-ம் ஆண்டிலோ அப்படியே இரண்டு மடங்காகி புலிகளைப் போல் அழிவின் விளிம்பில் இருக்கக் கூடிய ஒரு இனமாக சிறுத்தைகளை மாற்றிவிட்டனர்.
நாக்பூர் முதலிடம்
நாக்பூர் வனப்பகுதியில் மட்டும் 81 சிறுத்தைகள் இறந்திருக்கின்றன.
2010-ம் ஆண்டில் தே வனப்பகுதியில் 56ம், 2009ல் 48 சிறுத்தைகளும் உயிரிழந்திருக்கின்றன.
இந்த வனப்பகுதியில் பெருமளவில் சிறுத்தைகள் வேட்டையாடப்படுவதாக கூறப்படுகிறது.
கடந்த ஆண்டு உயிரிழந்த சிறுத்தைகளில் மனிதர்களால் 41 விழுக்காடு சிறுத்தைகளும் விபத்துகளால் 8 விழுக்காடு சிறுத்தைகளும் உயிரிழந்திருக்கின்றன.
ஆபத்துகளில் சிக்கிக் கொண்ட நிலையில் மீட்கப்படும்போது 14 சிறுத்தைகள் உயிரிழந்திருக்கின்றன.
இருப்பினும் உத்தர்காண்ட் மாநிலத்தில்தான் 114 சிறுத்தைகள் கடந்த ஆண்டு இறந்திருக்கின்றன.