காதலனுடன் சென்ற மகள் : அவமானம் தாங்க முடியாமல் பெற்றோர் தற்கொலை
குமரி: எதிர்ப்பை மீறி காதலனுடன் சென்ற மகளின் செயலால் அவமானம் அடைந்த பெற்றோர் தற்கொலை செய்து கொண்டனர்.
குமரி மாவட்டம் மண்டைக்காட்டை அடுத்த மூத்தாருன்னி பகுதியைச் சேர்ந்தவர் சுந்தரம் பிள்ளை(55). கூலித்தொழிலாளியான அவருக்கு ஜெயா(44) என்ற மனைவியும்,
சுபா(18) என்ற மகளும் உள்ளனர்.
நாகர்கோவிலில் உள்ள கல்லூரி ஒன்றில் படித்து வந்த சுபா தினமும் கல்லூரிக்கு பஸ்சில் சென்று வந்தார். அப்போது தக்கலையைச் சேர்ந்த வாலிபருடன் அவருக்கு பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இருவரும் காதலர்களாக மாறினர்.
இது குறித்து அறிந்த சுபாவின் பெற்றோர் காதலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் பெற்றோரின் எதிர்ப்பை மீறி சுபா தனது காதலருடன் சென்றுவி்ட்டார். மகள் காதலனுடன் சென்றதால் அவமானம் தாங்க முடியாத ஜெயா நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து மண்டைக்காடு போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டது.
இந்த நிலையில் நேற்று சுந்தரம் பிள்ளையின் வீடு திறக்கப்படாமல் இருந்தது. இதனால் சந்தேகம் அடைந்த அக்கம்பக்கத்தினர் கதவை தட்டிப் பார்த்தனர். வீட்டிற்குள் இருந்து பதில் எதுவும் வராததால் கதவின் சாவி துவாரம் வழியாக உள்ளே பார்த்தனர். அப்போது சுந்தரம் பிள்ளை வாயில் நுரை தள்ளிய நிலையி்ல் பிணமாகக் கிடந்தது தெரிய வந்தது. இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
மகளின் பிரிவு, மனைவியின் இறப்பு உள்ளிட்ட காரணங்களால் மனமுடைந்ததால் சுந்தரம்பிள்ளை தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது.