For Daily Alerts
Just In
கூடங்குளம் அணு மின் நிலையத்தை உடனடியாக செயல்படுத்த வேண்டும்-ஜெயலலிதா
சங்கரன்கோவில் இடைத்தேர்தல் பணியில் ஈடுபட்டிருந்த 32 அமைச்சர்களும் தேர்தலை முடிந்ததையடுத்து தங்கள் வழக்கமான பணிகளுக்கு திரும்பியுள்ளனர். இந்த நிலையில் இன்று பிற்பகல் அமைச்சரவைக் கூட்டம் கூடியது.
இதில் கூடங்குளம் அணு மின் நிலையம் குறித்து முக்கியமாக விவாதிக்கப்பட்டது. இந்த கூட்டத்தில், கூடங்குளம் அணு மின் நிலையத்தால் உயிர்களுக்கும், விவசாயத்திற்கும், மீன்பிடி தொழிலுக்கும் எந்தவித பாதிப்பும் இல்லை என்று நிபுணர் குழு அறிக்கை அளித்துள்ளதால், கூடங்குளம் மின் நிலையத்தை உடனடியாக செயல்படுத்த மத்திய அரசை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக தமிழக அரசு செய்திக்குறிப்பு தெரிவித்துள்ளது.
Comments
English summary
Tamil Nadu cabinet is meeting today to discuss UN resolution against Sri Lanka, Kudankulam issue, budget and other important issues. Ministers are back to the routine after indulged in election work in Sankarankovil.
Story first published: Monday, March 19, 2012, 14:48 [IST]