For Daily Alerts
Just In
இடிந்தகரை போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்க சென்ற வைகோ, கொளத்தூர் மணி, சீமான் கைது
பாளையங்கோட்டை: கூடங்குளம் அணு உலைக்கு எதிராக இடிந்தகரையில் உண்ணாவிரதம் இருந்து வரும் உதயகுமார் உள்ளிட்டோரை நேரில் சந்திக்க பேரணியாக செல்ல முயன்றதாக மறுமலர்ச்சி திமுக பொதுச்செயலாளர் வைகோ, பெரியார் திராவிடர் கழகத் தலைவர் கொளத்தூர் தா.செ.மணி, நாம் தமிழர் இயக்க தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உட்பட ஐநூற்றுக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
முன்னதாக பாளையங்கோட்டையில் கூடங்குளம் அணு உலைக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மறுமலர்ச்சி திமுக உட்பட பல்வேறு அமைப்பினர் கண்டன உரையாற்றினர்.
ஆர்ப்பாட்டம் முடிந்ததும் வைகோ, கொளத்தூர் மணி உள்ளிட்டோர் பேரணியாக இடிந்தகரை நோக்கிச் செல்ல முயற்சித்தனர். ஆனால் போலீசார் அவர்களைத் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். இதனால் பாளையங்கோட்டை, கூடங்குளம் பகுதிகளில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Comments
English summary
MDMK chief Vaiko including 500 others were arrested on Friday by police while he was on his way to Idinthakarai village to address a gathering.
Story first published: Friday, March 23, 2012, 16:06 [IST]