காவிரி பிரச்சனை: தமிழகம் விபரீத விளைவுகளை சந்திக்கும்-குமாரசாமி எச்சரிக்கை
இது குறித்து அவர் பெங்களூரில் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
கோடை சாகுபடிக்காக காவிரியில் இருந்து கர்நாடக விவசாயிகள் நீர் எடுப்பதை தடுக்கக் கோரி தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது. இது கர்நாடக மாநில விவசாயிகளின் நலனுக்கு எதிரானது ஆகும். மழை பெய்யாததால் விவசாயிகள் நீரின்றி தவித்து வருகின்றனர்.
தமிழக அரசு தான் தாக்கல் செய்துள்ள மனுவை திரும்பப் பெறாவிட்டால் கர்நாடக விவசாயிகள் போராட்டத்தில் குதிக்க வேண்டி இருக்கும். அவ்வாறு விவசாயிகள் போராடினால் விபரீத விளைவுகளை சந்திக்க நேரிடும். தமிழக அரசு குறிப்பாக கோடை காலத்தில் தண்ணீர் கேட்பது கண்டனத்திற்குரியது. அது அரசியல் ஆதாயத்திற்காகவும், கர்நாடக விவசாயிகள் மத்தியில் கலக்கத்தை உண்டாக்கவும் தான் காவிரிப் பிரச்சனையை எழுப்புகிறது.
தமிழக அரசின் கோரிக்கையை எக்காரணத்திற்காகவும் ஏற்கக் கூடாது என்று நான் கர்நாடக அரசை வலியுறுத்துவேன் என்றார்.